பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரியே இடையில் மறித்து அந்த நபர்மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed